காயமடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் டெம்போ வேனில் சிக்கி இருப்பவர்களை அந்த பகுதி மக்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் சேர்ந்து மீட்கும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் ஆகியோர் விபத்து குறித்து கேட்டறிந்தனர்.
கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட டெம்போ வேன் என்பதால் உயிரிழந்தவர்கள் குறித்த விவரம் வெளிவரவில்லை. அதிகாலையில் நடந்த இந்த சம்பவம், அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பலத்த காயங்களுடன் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் ஆரோக்கியதாஸ் 48, ஜான் பாஸ்கோ 63, நளினி 50, வேன் டிரைவர் ஜெகதீசன் 48, செல்சியா பெயர் விபரம் மட்டும் கிடைத்துள்ளது.
செய்தி: க.சண்முகவடிவேல்