தாம்பரம்- மதுரவாயல் பைபாஸ் சாலையில் பயணிக்கும் அரசுப் பேருந்து மோதியதில், 29 வயது கான்ஸ்டபிள் உயிரிழந்தார்.
விபத்தில் உயிரிழந்த கான்ஸ்டபிள், ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் டிரைவராக இருந்த நாகராஜ் (வயது 29) என்று தெரியவந்தது.
![publive-image publive-image](https://indianexpress.com/wp-content/uploads/2022/08/anigif98765.gif)
வியாழக்கிழமை சென்னை புறநகர்ப் பகுதியில், பலத்த மழை பெய்து கொண்டிருந்தபோது, நாகராஜ் தனது இருசக்கர வாகனத்தில் புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
மழை அதிகமாக இருந்ததால், கன்னடபாளையம் அருகே சாலையோரம் பைக்கை நிறுத்திவிட்டு மழைப்பொழிவு குறையும் வரை காத்திருந்தார்.
அப்போது, திருவண்ணாமலையில் இருந்து வந்து கொண்டிருந்த எஸ்.இ.டி.சி., பேருந்து, மீடியனில் மோதி, கட்டுப்பாட்டை இழந்து நாகராஜ் மீது இடித்தது.
நாகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார், பஸ் டிரைவர் காளிதாஸ் (வயது 48) என்பவரை கைது செய்தனர்.
நாகராஜின் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil