/tamil-ie/media/media_files/uploads/2017/09/madras-high-court-759.jpg)
தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில், அரசின் சாதனை விளக்க கண்காட்சி, பொருட்காட்சி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் அங்கேரிபாளையத்தை சேர்ந்த கதிர்வேல். எம்.காம் மாணவரான அவர் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், திருப்பூரில் உள்ள சிக்கன்னா அரசு கலை கல்லூரியில் 45 நாட்கள் அரசு பொருட்காட்சி வரும் 3-ம் தேதி தொடங்கப்படவுள்ளது. இந்த பொருட்காட்சி நடைபெற்றால் வகுப்புகளுக்கு இடையூறாக இருக்கும். எனவே பொருட்காட்சியை கல்லூரி வளாகத்தில் நடத்த தடை விதிக்க வேண்டும். வேறு இடத்தில் நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராகி பொருட்காட்சி நடத்துவதற்கு 90 சதவிகித ஏற்பாடுகள் முடிவடைந்துவிட்டது. அதனால் பொருட்காட்சியை வேறு இடத்திற்கு மாற்ற முடியாது என தெரிவித்தார்.
இதனையடுத்து நீதிபதி, கடைசி நேரத்தில் இந்த வழக்கு தொடர்ப்பட்டுள்ளதால் திருப்பூர் கலை கல்லூரியில் பொருட்காட்சி நடத்த தடை விதிக்க முடியாது என தெரிவித்தார். மேலும், வரும் காலங்களில் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பொருட்காட்சி, கண்காட்சி நடத்த தடை விதித்த நீதிபதி கிருபாகரன், இதுகுறித்து அரசு விதிமுறைகள் வகுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.