/indian-express-tamil/media/media_files/Xgt2QsRZ3h7jEO2j2N3j.jpg)
தமிழ்நாட்டில் 100 மி.லி மது விற்பனைக்கு அரசு தீவிர பரிசீலனை நடத்துவதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் கள்ளச்சாராய நடமாட்டத்தை தடுக்கும் வகையில் 100 மில்லி லிட்டர் மது விற்பனை விரைவில் தொடங்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக, சட்டப்பேரவையில் அமைச்சர் முத்துசாமி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எண்ணம் பூரண மதுவிலக்குதான்; ஆனால் அது தற்போது சாத்தியம் இல்லை” என்றார்.
தொடர்ந்து, “நமது அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் மது விற்பனை நடைபெறுகிறது. நாம் மட்டும் எப்படி கற்பூரம் போல் இருக்க முடியும்” எனவும் கேள்வியெழுப்பினார்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் 100 மில்லி லிட்டர் மது விற்பனையை தொடங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மது பிளாஸ்டிக் பாட்டிலில் விற்பனை செய்யப்படும் எனவும் இது குறித்து பரிசீலனை செய்யப்படுவதாகவும் விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
2024 ஜூன் 19 மற்றும் ஜூன் 20 ஆகிய தேதிகளில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதாகக் கூறப்படும் குறைந்தது 60க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்தச் சோகத்தை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு மாவட்ட ஆட்சியர் ஸ்ரவன் குமார் ஜாதவத்தை இடமாற்றம் செய்தது. மேலும், காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனாவை இடைநீக்கம் செய்தது. இந்த துயர சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் மற்றும் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ₹50,000 நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.