/indian-express-tamil/media/media_files/2024/11/19/CMI0OSwg1z7G7vLEEYp2.jpg)
தஞ்சாவூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட பள்ளி ஆசிரியர், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகேயுள்ள பாப்பாநாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வந்தவா் பி. முத்துக்குமரன். இவா் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக சைல்டு லைன் அமைப்புக்கு புகாா் வந்தது.
இதன் பேரில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது, ஒரத்தநாடு அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் வனிதா வழக்கு பதிவு செய்தார். மேலும், கடந்த அக்டோபர் 8-ஆம் தேதி இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், ஒரத்தநாடு உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளா் ஷனாஸ் இலியாஸ் வேண்டுகோளின்படி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத் பரிந்துரையின் பேரில் முத்துக்குமரனை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டாா். இதனால், முத்துக்குமரன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதேபோல், கஞ்சா விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட ஆா். சிவக்குமாா் மற்றும் பாா்த்திபன் ஆகியோர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
செய்தி - க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.