/indian-express-tamil/media/media_files/ekzMFNwS6bEIwQeJLy3U.jpg)
ஆளுநர் ஆர்.என். ரவி நாளை டெல்லி செல்கிறார். இதனால் பொன்முடி பதவியேற்பு விழா நடக்குமா என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாள் பயணமாக டெல்லிக்கு இன்று காலை புறப்பட்டு சென்றுள்ளார். இந்நிலையில் பொன்முடி பதவி ஏற்றுக்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவரும் குற்றவாளிகள் எனவும் அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2024 ஜனவரியில் தீர்ப்பளித்தது. இதனால் பொன்முடி அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ பதவியை இழந்தார். இந்த நிலையில், அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த டெல்லி உச்ச நீதிமன்றம், “சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனை நிறுத்திவைத்து உத்தரவிட்டது. இதையடுத்து, தண்டனை நிறுத்திவைக்கப்பட்டதால் அவர் மீண்டும் எல்.எல்.ஏ ஆக முடியும் என்றும் அமைச்சர் ஆக முடியும் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில், அவரின் திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது வாபஸ் பெறப்பட்டது. இந்த நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “பொன்முடியை மீண்டும் அமைச்சராக்க கவர்னர் ஆர்.என். ரவிக்கு கடிதம் எழுதினார்.
அதில், இன்று அமைச்சர் பதவியை அவர் மீண்டும் ஏற்பார் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் இன்று காலை ஆளுநர் ஆர்.என். ரவி டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். அவர் 3 நாள் பயணத்தை முடித்துவிட்டுதான் சென்னை வருவார்.
இதனால் பொன்முடி பதவி பிரமாணத்தில் சிக்கல் நீடிக்கிறது. 2006-11-ம் ஆண்டு தி.மு.க ஆட்சி காலத்தில் உயர்கல்வி, கனிமவளத் துறை அமைச்சராக பொன்முடி இருந்தார். அப்போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக பொன்முடி, அவரின் மனைவிக்கு எதிராக 2011-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.