/tamil-ie/media/media_files/uploads/2023/07/4peyi.jpg)
டெல்லியில் அட்டர்னி ஜெனரலுடன் தமிழக ஆளுனர் ஆர்.என் ரவி சந்திப்பு
டெல்லி சென்றுள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணியை சந்தித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒரு வார பயணமாக ஆளுநர் ரவி ஜூலை 8ம் தேதி டெல்லிக்குச் சென்றார். மேலும் அவர் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.
சட்டவிரோதமான பண பரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்று தமிழக அரசு பரிந்துரைத்ததை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொள்ளவில்லை.
மேலும், செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதாக, முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் கடிதம் அனுப்பினார். ஆனால் இந்த விவகாரத்தில் தலையிட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கட்ரமணியிடம் இது குறித்து ஆலோசனை நடத்துமாறு ஆளுநரிடம் தெரிவித்தனர்.
இதனால் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கும் உத்தரவை நிறுத்தி வைப்பதாக, முதல்வருக்கு ஆளுநர் மீண்டும் கடிதம் எழுதினார். இந்நிலையில் அமித்ஷாவை சந்தித்து, இது தொடர்பாக பேசியதாக கூறப்பட்டது.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை ஆளுநர் ஆர்.என்.ரவி, அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கட்ரமணியை சந்தித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக அரசுக்கும் ஆளுநருக்கு இடையே உள்ள சிக்கல் குறித்தும், அது தொடர்பாக உள்ள சட்ட விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் ஆளுநர் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்யும் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.