பல்கலை. துணை வேந்தர் தேடுதல் குழு அமைப்பு; யு.ஜி.சி பிரதிநிதியை சேர்த்த ஆளுநர்

சென்னை பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தர்களை தேர்வு செய்ய குழு அமைத்த ஆளுநர் ஆர்.என். ரவி, யு.ஜி.சி பிரதிநிதியை சேர்த்து உத்தரவிட்டுள்ளார்.

சென்னை பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தர்களை தேர்வு செய்ய குழு அமைத்த ஆளுநர் ஆர்.என். ரவி, யு.ஜி.சி பிரதிநிதியை சேர்த்து உத்தரவிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
RN Ravi (6)

3 பல்கலைகழகங்களின் துணை வேந்தர்கள் தேடுதல் குழு; யு.ஜி.சி பிரதிநிதியை சேர்த்த ஆளுநர் ஆர்.என். ரவி உத்தரவு

சென்னை பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தர்களை தேர்வு செய்ய குழு அமைத்த ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழ்நாடு அரசின் எதிர்பை மீறி யு.ஜி.சி பிரதிநிதியை சேர்த்து உத்தரவிட்டுள்ளார்.

Advertisment


சென்னை பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகிய 3 பல்கலைக்கழகங்களில் தற்போது துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக உள்ளன.  இந்த 3 பல்கலைக்கழகங்களுக்கும் துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுவில், பல்கலைக்கழக செனட் உறுப்பினர்கள், தமிழக அரசின் பிரதிநிதி ஒருவர் மற்றும் ஆளுநர் தரப்பில் ஒருவர் இடம்பெறுவர். 3 பேர் கொண்ட தேடுதல் குழு விண்ணப்பங்களை பரிசீலித்து, தகுதியான 3 பேரின் பெயர்களை ஆளுநருக்கு பரிந்துரை செய்யும். அதில் ஒருவரை ஆளுநர் நியமிப்பது வழக்கம்.

இந்த சூழ்நிலையில்,  துணைவேந்தர் தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானிய குழு (யு.ஜி.சி) பிரதிநிதி ஒருவரை சேர்க்க வேண்டும் என்று ஆளுநர் நிபந்தனை விதித்துள்ளதாக அண்மையில் உயர் கல்வி அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார். இதனால், ஆளுநர் விதித்த நிபந்தனை தொடர்பாக, தமிழக உயர் கல்வித் துறை சார்பில் விளக்கக் கடிதம் அனுப்பியது.

அந்த கடிதத்தில், “துணைவேந்தர் நியமனத்தில், யு.ஜி.சி-யின் விதிகளை பின்பற்ற வேண்டும் என்பது கட்டாயம். தேடுதல் குழுவில் யு.ஜி.சி-யின் பிரதிநிதி ஒருவர் சேர்க்கப்பட வேண்டும் என்பது கட்டாயமில்லை’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

Advertisment
Advertisements

இந்நிலையில், சென்னை பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகிய 3 பல்கலைக்கழகங்களுக்கும் துணை வேந்தர்களை தேர்வு செய்வதற்கான 4 பேர் அடங்கிய தனித்தனிக் குழுக்களை அமைத்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். 


சென்னைப் பல்கலைக்கழம்: 

சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழுவில், தமிழக ஆளுநரின் பிரதிநியாக, கர்நாடக மத்தியப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் பட்டு சத்யநாராயணாவும், தமிழக அரசின் பிரதிநிதியாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும், மாநில திட்டக் குழுவின் உறுபினருமான கே.தீனபந்துவும், பல்கலைக்கழக செனட் பிரதிநிதியாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பி.ஜெகதீசனும், யு.ஜி.சி பிரதிநிதியாக, தெற்கு பிகார் மத்தியப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ஹெச்.சி.எஸ் ரத்தோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோவை பாரதியார் பல்கலைக்கழகம்:

கோவை பாரதியார் பல்கலைக்கழகம் துணைவேந்தர் தேடுதல் குழுவில், தமிழக அரசின் பிரதிநிதியாக, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பி.டபிள்யூ.சி. டாவிதாரும், பல்கலைக்கழக சிண்டிகேட் பிரதிநிதியாக சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பி. துரைசாமியும், பல்கலைக்கழக செனட் பிரதிநியாக பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஜி. திருவாசகமும், யு.ஜி.சி பிரதிநிதியாக, பெங்களூரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பி. திம்மே  கவுடாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம்: 

கல்வியியல் பல்கலைக்கழகம் துணைவேந்தர் தேடுதல் குழுவில், தமிழக ஆளுநரின் பிரதிநியாக, யு.ஜி.சி உறுப்பினர் பேராசிரியர் சுஷ்மா யாதவாவும், தமிழக அரசின் பிரதிநிதியாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி கே. அலாவுதீனும், பல்கலைக்கழக செனட் பிரதிநிதியாக தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டி. பத்மநாபனும், யு.ஜி..சி பிரதிநிதியாக, தெற்கு பிஹார் மத்தியப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ஹெச்.சி.எஸ் ரத்தோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் குழுவில் உள்ள உறுப்பினர்கள், சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களுக்காக துணைவேந்தர் பணியிடங்களுக்கு 3 பெயர்களைப் பரிந்துரைக்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.

தமிழ் நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை நியமனம் செய்ய, 3 பேர் கொண்ட துணை வேந்தர் தேடுதல் குழு அமைக்கப்படுவது வழக்கமான நடைமுறையாக இருந்து வந்த நிலையில், முதல் முறையாக ஆளுநர் ஆர்.என். ரவி யு.ஜி.சி பிரதிநிதியை சேர்த்து 4 பேர் கொண்ட தேர்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Governor Rn Ravi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: