/tamil-ie/media/media_files/uploads/2023/08/RN-Ravi.jpg)
பள்ளிகளில் படிக்கும் சிறுவர்கள் தங்கள் கைகளில் சாதி அடிப்படையில் கயிறுகளைக் கட்டிக்கொள்கிறார்கள். இது என்ன மாதிரியான கலாசாரம்?; ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழகத்தில் சாதிய பாகுபாடுகள் அதிகரித்து வருகின்றன என நந்தனார் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள மா.ஆதனூர் கிராமத்தில் நடைபெற்ற நந்தனார் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய ஆர்.என்.ரவி, ”தமிழ்நாட்டில் சாதிய பாகுபாடுகள் அதிகரித்து வருகின்றன. இந்த சாதிய வன்கொடுமைகள் எந்த அளவிற்கு தலைதூக்கிவிட்டது என்றால், வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்துள்ளார்கள்.
நாங்குநேரியில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவனை மாற்று சமூகத்தைச் சேர்ந்த சக மாணவர்களே வீடு புகுந்து வெட்டியுள்ளார்கள். மேலும் பள்ளிகளில் படிக்கும் சிறுவர்கள் தங்கள் கைகளில் சாதி அடிப்படையில் கயிறுகளைக் கட்டிக்கொள்கிறார்கள். இது என்ன மாதிரியான கலாச்சாரம்?
பஞ்சாயத்து தலைவராக வெற்றி பெற்ற இந்துமதி என்ற பெண், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்தால் அவரால் பதவி பிரமாணம் ஏற்றுக்கொள்ள முடியாத நிலை உள்ளது.
மேலும், பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 7 சதவீத குற்றவாளிகள் மட்டுமே தண்டிக்கப்படுகின்றனர். குற்றச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதிகபட்சமான வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவதில்லை." இவ்வாறு கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.
இந்த விழாவில் பட்டியலினத்தைச் சேர்ந்த 100 பேர் பூணுல் அணிந்துக் கொண்டனர். முன்னதாக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் கருப்பு கொடி காட்ட முயன்றனர்.
எஸ்.பி. ராஜாராம் தலைமையில் 700க்கும் மேற்பட்ட போலீசார் விழாவில் கலந்துகொண்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.