தேசிய கல்விக்கொள்கையின் அடிநாதத்தில் திருவள்ளுவர் இருக்கிறார் - ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு

“தேசிய கல்விக்கொள்கையின் அடிநாதத்தில் திருவள்ளுவர் இருக்கிறார்; சொல்லப்போனால் புதிய கல்விக்கொள்கை உருவாக்க காரணமாக திருவள்ளுவர்தான் இருந்துள்ளார்” என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பேசியுள்ளார்.

“தேசிய கல்விக்கொள்கையின் அடிநாதத்தில் திருவள்ளுவர் இருக்கிறார்; சொல்லப்போனால் புதிய கல்விக்கொள்கை உருவாக்க காரணமாக திருவள்ளுவர்தான் இருந்துள்ளார்” என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பேசியுள்ளார்.

author-image
WebDesk
New Update
RN Ravi

சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற திருவள்ளுவர் திருநாள் விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, “பிரதமர் நரேந்திர மோடி திருவள்ளுவரின் மிகப்பெரிய பக்தர் என்று கூறினார்.

“தேசிய கல்விக்கொள்கையின் அடிநாதத்தில் திருவள்ளுவர் இருக்கிறார்; சொல்லப்போனால் புதிய கல்விக்கொள்கை உருவாக்க காரணமாக திருவள்ளுவர்தான் இருந்துள்ளார்” என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பேசியுள்ளார்.

Advertisment

சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற திருவள்ளுவர் திருநாள் விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, “பிரதமர் நரேந்திர மோடி திருவள்ளுவரின் மிகப்பெரிய பக்தர்; திருவள்ளுவரின் கொள்கையை உலகம் முழுவதும் பரப்பி வருகிறார்; பிரதமர் மோடியின் தொலைநோக்கு திட்டங்களுக்கு திருக்குறள் உந்துதலாக இருக்கிறது” என்று பேசினார்.

சென்னையில் நடைபெற்ற திருவள்ளுவர் திருநாள் விழாவில் கலந்துகொண்ட ஆளுநர் ஆர்.என். ரவி பேசியதாவது: “பிரதமர் நரேந்திர மோடி திருவள்ளுவரின் மிகப்பெரிய பக்தர்; திருவள்ளுவரின் கொள்கையை உலகம் முழுவதும் பரப்பி வருகிறார்; பிரதமர் மோடியின் தொலைநோக்கு திட்டங்களுக்கு திருக்குறள் உந்துதலாக இருக்கிறது.

“கற்க கசடற கற்பவை கற்றபின் 
நிற்க அதற்குத் தக” எனும் குறளின் அடிப்படையில் புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக்கொள்கையின் அடிநாதத்தில் திருவள்ளுவர் இருக்கிறார்; சொல்லப்போனால் புதிய கல்விக்கொள்கை உருவாக்க காரணமாக திருவள்ளுவர்தான் இருந்துள்ளார். 70 ஆண்டுகளாக பிரிட்டிஷ் பாடத்திட்டத்தைதான் பயின்று வந்தோம். அது நம் அறிவை பெரிய அளவிற்கு வளர்க்கவில்லை” என்று பேசினார்.

Governor Rn Ravi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: