/tamil-ie/media/media_files/uploads/2023/07/RN-Ravi-I.jpg)
தமிழக கவர்னர் ஆர்.என். ரவி
தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, கவர்னர் ஆர்.என். ரவிக்கு கடிதம் ஒன்று எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கில் நடவடிக்கை எடுக்க அனுமதி கோரியிருந்தார்.
அதாவது முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் கே.சி.வீரமணி மற்றும் பி.வி ரமணா குறித்து அந்தக் கடிதத்தில் கூறியிருந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக கவர்னர் ஆர்.என். ரவி அளித்துள்ள பதில் கடிதத்தில், முன்னாள் அமைச்சர்கள் பி.வி. ரமணா மற்றும் எம்.ஆர். விஜய பாஸ்கர் மீதான வழக்கு சி.பி.ஐ வசம் நிலுவையில் உள்ளது.
மேலும், கே.சி. வீரமணி வழக்கில் முறையாக அங்கீகரிக்கப்பட்ட நகரை சமர்பிக்க வேண்டும் என்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் வழக்கு தொடர்பாக எந்த ஆவணங்களும் வரவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.