Advertisment

அரசு ஊழியர் போராட்டக் குழு ஆவேசம்: 11-ம் தேதி தலைமைச் செயலகம் முற்றுகை போராட்டம்

அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ஏப்.11ஆம் தேதி சென்னையில் தலைமை செயலகம் முற்றுகை போராட்டம் நடத்தவுள்ளனர்.

author-image
WebDesk
New Update
Govt employees said 11th Secretariat blockade protest

தமிழ்நாடு தலைமை செயலகம்

மதுரையில் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஊழியர் சங்கங்களின் போராட்டக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஏப்.4) நடைபெற்றது.

மாநில அமைப்பாளர் அன்பரசு தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அரசு ஊழியர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

Advertisment

அப்போது, பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ஏப்.11ஆம் தேதி சென்னையில் தலைமை செயலகம் முற்றுகை போராட்டம் நடத்தவுள்ளதாக முடிவெடுக்கப்பட்டது.

இந்த முற்றுகை போராட்டத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அரசு ஊழியர்கள் கலந்துகொள்ள உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment