Advertisment

அரசு மருத்துவமனை ஒப்பந்த செவிலியருக்கான ஊதியம் உயர்வு: 15 நாட்களுக்குள் அரசாணை

அரசு மருத்துவமனை ஒப்பந்த செவிலியருக்கான ஊதியம் உயர்வு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அரசு மருத்துவமனை ஒப்பந்த செவிலியருக்கான ஊதியம் உயர்வு: 15 நாட்களுக்குள் அரசாணை

அரசு மருத்துவமனை ஒப்பந்த செவிலியருக்கான ஊதியத்தை 7 ஆயிரத்தில் இருந்து 14 ஆயிரமாக உயர்த்தி 15 நாட்களுக்குள் அரசாணை பிறப்பிக்கப்படும் என தமிழக அரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது.

Advertisment

ஊதிய உயர்வு, பணிநிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனையில் பணியற்றி வரும் ஒப்பந்த செவிலியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு தடை கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. செவிலியர் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்த சுகாதாரத்துறை செயலாளர் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதற்கிடையில் சம வேலைக்கு, சம ஊதியம் என்ற அடிப்படையில் நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக ஒப்பந்த செவிலியர்களுக்கு ஊதியம் வழங்க கோரி ஜெய பிரகாஷ் என்பவர் பொது நல வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த அனைத்து வழக்குகளும் இன்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அரசு மருத்துவமனையில் பணியற்றி வரும் ஒப்பந்த செவிலியர்களின் மாத ஊதியம், 7 ஆயிரத்திலிருந்து 14 ஆயிரமாக உயத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இது தொடர்பாக 15 நாட்களுக்குள் அரசாணை பிறப்பிக்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

செவிலியர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தற்போது ஊதிய உயர்வு மட்டுமல்லாமல், சம வேலைக்கு, சம ஊதியம் என்ற கோரிக்கையை பரிசீலிக்க அரசு குழுவுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரினார்.

இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள், அரசு மருத்துவமனையில் பணியாற்றும் ஒப்பந்த செவிலியர்களுக்கு அரசு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் என்கின்ற கோரிக்கை தொடர்பாக, தமிழக அரசின் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை குழு முன் செவிலியர் முறையிட வேண்டும்.

மேலும் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த செவிலியர் ஒவ்வொரு செவிலியர்களும் பணியில் சேர்ந்த நாள், பணியாற்றிய விவரங்கள், பணிக்காலம் ஆகியவை குறித்து தனித்தனியாக அரசு அமைத்த குழுவிடம் கொடுக்க வேண்டும். அவற்றை பரிசீலித்து ஊதியத்தை நிர்ணயிக்க 6 மாதத்தில் அரசுக்குழு, பரிசீலித்து உரிய முடிவெடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு, வழக்கின் அடுத்த விசாரணை தள்ளிவைத்தனர்.

Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment