/indian-express-tamil/media/media_files/wz1Xgd1OqMZ72ZJLP4oN.jpg)
சென்னை உள்பட 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும் இந்த அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இயற்கைப் பேரிடர் காலங்களில் மாவட்ட ஆட்சியருடன் ஒருங்கிணைந்து பணியாற்றி, அந்த மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்
வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்த, அரசின் நலத்திட்ட உதவிகளை கண்காணித்திட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமனம். அதன்படி,
திருப்பத்தூர் மாவட்டத்திற்கு சி. விஜயராஜ்குமார்
திண்டுக்கல் மாவட்டத்திற்கு பிரஜேந்திர நவிந்த்
சென்னை- ஜெயஸ்ரீ முரளிதரன்
திருவண்ணாமலை- மதுமதி
தூத்துக்குடி- வீரராகவ ராவ்
கள்ளக்குறிச்சி- தர்மேந்திர பரிதமாப்
திருப்பூர்- வள்ளலார்
கோவை-நந்தகுமார்
புதுக்கோட்டை- சுந்தரவள்ளி
நாமக்கல்- அசியா மரியம்
நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு மகேஸ்வரன் ஐ.ஏ.எஸ் ஆகியோர் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.