தமிழகம் முழுவதும் நாளை கிராம சபை கூட்டம் நடத்த அரசு உத்தரவு

நாளை (நவ 23) தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டுமென மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இக்கூட்டம், கடந்த நவம்பர் 1-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நாளை (நவ 23) தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டுமென மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இக்கூட்டம், கடந்த நவம்பர் 1-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

author-image
WebDesk
New Update
Gram sabha

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கிராமப் புறங்களிலும், நாளைய (நவ 23) தினம் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisment

உள்ளாட்சிகள் தினமான கடந்த நவம்பர் 1-ஆம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அக்டோபர் 31-ஆம் தேதி தீபாவளி விடுமுறையை தொடர்ந்து, அடுத்த நாளும் விடுமுறை அறிவிக்கப்பட்டதால், இந்த கிராம சபை கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், நாளை (நவ 23) கிராம சபை கூட்டம் நடத்த ஊரக வளர்ச்சி இயக்குநர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார். இதையொட்டி அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "தமிழகம் முழுவதும் வருகிற 23ம் தேதி காலை 11 மணிக்கு, கிராம சபை கூட்டத்தினை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி நடத்த வேண்டும். இந்த கிராம சபை கூட்டத்தில், கிராம ஊராட்சிகளில் சிறப்பாக பணிபுரிந்த தூய்மை பணியாளர்களை சிறப்பிக்க வேண்டும். மகளிர் சுய உதவி குழுக்களை கவுரவிக்க வேண்டும். வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க வேண்டும்.

மேலும், தூய்மை பாரத இயக்க திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஜல்ஜீவன் இயக்கம், தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் மேம்பாட்டு திட்டம் ஆகியவை குறித்தும் விவாதம் நடத்தப்பட வேண்டும்.

Advertisment
Advertisements

கிராம சபை கூட்டங்கள் மதச்சார்புள்ள எந்தவொரு வளாகத்திலும் நடத்தக்கூடாது. கிராமசபை கூட்டங்கள் நடைபெறும் இடத்தை முன்கூட்டியே ஊரக பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். மேலும், 23ம் தேதியன்று நடைபெறவுள்ள கிராம சபை கூட்டம், அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெற உரிய நடவடிக்கை எடுத்திடுவதுடன், கூட்ட நிகழ்வுகளை `நம்ம கிராம சபை' செல்போன் ஆப் மூலம் உள்ளீடு செய்திட வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: