/tamil-ie/media/media_files/uploads/2020/06/Chennai-Lockdown-Tamil-Nadu-Health-Department.jpg)
Chennai Lockdown,
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் கோரத்தாண்டவம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மாநில தலைநகரான சென்னையில் அதிகளவிலான எண்ணிக்கையில் தொற்றுகள் பதிவாகியிருக்கின்றன. இருப்பினும் கடந்த சில தினங்களாக அங்கு வழக்கத்தை விட தொற்று எண்ணிக்கை சற்று குறைந்திருக்கிறது. தற்போது சென்னையில் மட்டும் 74,969 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலவச ரேசன் பொருட்கள் – உயர்நீதிமன்றம் உத்தரவு
இந்நோயை கட்டுப்படுத்தும் நோக்கில், சென்னை பெருநகர மாநகராட்சி மொத்தம் 15 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையை மண்டலவாரியாக இங்கே குறிப்பிடுகிறோம்.
இதுவரை சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்.#Covid19Chennai#GCC#Chennai#ChennaiCorporationpic.twitter.com/WgybRTjYUt
— Greater Chennai Corporation (@chennaicorp) July 10, 2020
கோடம்பாக்கம் மண்டலத்தில் - 2553 பேர்
அண்ணா நகர் - 2,236 பேர்
தேனாம்பேட்டை-2,036 பேர்
ராயபுரம் மண்டலத்தில் - 1,582 பேர்
தண்டையார்பேட்டை-1,522 பேர்
திரு.வி.க. நகர் - 1,538 பேர்
அம்பத்தூரில் - 1,243 பேர்
வளசரவாக்கத்தில் - 1,051 பேர்
அடையாறு - 1,263 பேர்
ஆலந்தூர் - 731 பேர்
திருவொற்றியூரில் -957 பேர்
மாதவரம் -712 பேர்
பெருங்குடி - 649
சோழிங்கநல்லூர் - 440
மணலியில் 369 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தவிர பிற மாவட்ட மக்கள் 1362 பேரும் சென்னையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னையில் வேகமாக தொற்று எண்ணிக்கைகள் குறைந்து, மீண்டு வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.