போலீசாருடன் தகராறு வீடியோ வைரல்: கோவையில் 6 திருநங்கைகள் மீது வழக்குப் பதிவு

கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் முதன்மை காவலருடன் தகராறில் ஈடுபட்டு தகாத வார்த்தைகளில் பேசி பணி செய்ய விடாமல் தடுத்த 6 திருநங்கைகள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் முதன்மை காவலருடன் தகராறில் ஈடுபட்டு தகாத வார்த்தைகளில் பேசி பணி செய்ய விடாமல் தடுத்த 6 திருநங்கைகள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
போலீசாருடன் தகராறு வீடியோ வைரல்: கோவையில் 6 திருநங்கைகள் மீது வழக்குப் பதிவு

கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் கடந்த 28ஆம் தேதி இரவு மணிகண்டன் என்ற பயணியிடம் செல்போன் மற்றும் பணத்தை 6 திருநங்கைகள் பறிக்க முயன்றுள்ளனர்.
பயணியை சிறைபிடித்த திருநங்கைகள் தகாத வார்த்தைகளில் திட்டி தாக்கியுள்ளனர்.

Advertisment

அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிங்காநல்லூர் முதன்மை காவலர் ரவிக்குமார் திருநங்கைகளிடமிருந்து மணிகண்டனை மீட்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு, போலீசாரின் ரோந்து வாகனத்தில் அமர வைத்தார்.

பின்தொடர்ந்து சென்ற திருநங்கைகள் ரோந்து வாகனத்தில் அமர்ந்திருந்த மணிகண்டனை வெளியில் இழுத்து தாக்க முற்பட்டனர். இதனை தடுத்த காவலரை திருநங்கைகள் தகாத வார்த்தைகளில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. சிங்காநல்லூர் உதவி ஆய்வாளர் செல்வராஜ் புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் 6 திருநங்கைகள் மீதும் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: