கடலூரில் மூட்டை மூட்டையாக குட்கா போதைப் பொருள்; சுற்றி வளைத்துப் பிடித்த போலீசார்; சொகுசு கார் பறிமுதல்!

கடலூரில் மூட்டை மூட்டையாக குட்கா போதைப் பொருள்களைப் போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்தனர். மேலும், சொகுசு காரை கைப்பற்றினர்.

கடலூரில் மூட்டை மூட்டையாக குட்கா போதைப் பொருள்களைப் போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்தனர். மேலும், சொகுசு காரை கைப்பற்றினர்.

author-image
WebDesk
New Update
arrest

கடலூரில் மூட்டை மூட்டையாக குட்கா போதைப் பொருள்களைப் போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்தனர். மேலும், சொகுசு காரை கைப்பற்றினர்.

கடலூரில் மூட்டை மூட்டையாக குட்கா போதைப் பொருள்களைப் போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்தனர். மேலும், சொகுசு காரை கைப்பற்றினர்.

Advertisment

கடலூர் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார்   போதை பொருட்களை கடத்தி விற்பனை செய்யும் நபர்களை கண்காணித்து கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு பிறபித்த உத்தரவின் பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் மேற்பார்வையில், வடலூர் காவல் ஆய்வாளர் கே. உதயக்குமார், தனிப்படை உதவி ஆய்வாளர்  தவச்செல்வம்  இராஜா, உதவி ஆய்வாளர் அறிவழகன் மற்றும் போலீசார்   ஆபத்தானபுரம் மங்கையர்கரசி திருமண மண்டபம் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். 

அப்போது அந்த வழியாக வந்த வெள்ளைநிற சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்ததில் போதை பொருட்கள் கடத்தி வந்த தண்ராஜ்பெரியால் (26), பாக்ராரோடு, ராஜஸ்தான், ஜாலூர் மாவட்டம், அவுலூச் கிராமம் திலிப்சிங் (வயது 20), இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் குட்கா வியாபாரிகள் கணேசன் (வயது 56), நெய்வேலி, அண்ணாநகர், மந்தாரக்குப்பம், நடராஜன், வடலூர், குறிஞ்சிப்பாடி ராம்குமார் (வயது 37), பாட்டைவீதி ஆபத்தாணபுரம் வேல்முருகன் (வயது 59) ஆகியோரை கைது
செய்தனர். 

மேலும், பெங்களூருவில் இருந்து 29 வெள்ளை நிற சாக்குமூட்டையில் கடத்தி வந்த சுமார் 348 கிலோ போதை குட்கா பொருட்களை கடத்தி வந்த கார் மற்றும் போதை பொருட்களை
கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குட்கா போதை பொருட்களை பிடித்த காவல் துறையினரை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார்.

Cuddalore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: