Advertisment

ஆளுனர்- தி.மு.க மோதல் புதிது அல்ல: சட்ட ரீதியாக சந்திக்க ஸ்டாலின் ரெடி

மாநில அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையிலான மோதல் புதிதல்ல என்றாலும், இந்த ஆண்டின் தொடர்ச்சியான மோதல்களால் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.

author-image
WebDesk
New Update
RN Ravi- MK Stalin

RN Ravi- MK Stalin

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்த ஆளுநர் ஆர்.என் ரவியின் சர்ச்சைக்குரிய முடிவைத் தொடர்ந்து, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தி.மு.க அரசுக்கும் இடையே வியாழன் மாலை நிலவி வந்த மோதல் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், அமைச்சரை பதவி நீக்கம் செய்ய ரவிக்கு அதிகாரம் இல்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் ஆளுநரின் கடிதத்தை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்றும் கூறினார்.

Advertisment

ஆளுநரின் செயலுக்கு தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அறிவுரைப்படி செந்தில் பாலாஜி பதவி நீக்க உத்தரவை நிறுத்தி வைப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், தி.மு.க அரசுக்கும் ஆர்.என். ரவிக்கும் இடையிலான மோதல் புதிதல்ல என்றாலும், இந்த ஆண்டின் தொடர்ச்சியான மோதல்களால் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது. அதிலும் நேற்றைய நிகழ்வு மோதலை மேலும் தூண்டியுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், மாநிலத்தை தமிழ்நாடு என்பதற்கு பதிலாக “தமிழகம்” என்ற சொல்லே “பொருத்தமான பெயராக இருக்கும் என்று ரவி கூறினார். அவரது அறிக்கை மாநிலத்திற்கு வேறு பெயரை பரிந்துரைக்கும் ஆளுநருக்கு உள்ள உரிமை பற்றிய விவாதத்தைத் தூண்டியது. தி.மு.க மட்டும் அல்லாது அதிமுகவிடம் இருந்தும் வலுவான எதிர்வினைகளை வெளிப்படுத்தியது.

"தமிழ்நாடு" இல் உள்ள "நாடு" என்ற சொல் மாநிலத்தில் உள்ள ஒரு பகுதி மக்களுக்கு ஒரு புண் புள்ளியாக இருந்து வருகிறது, இது "நாடு" என்று பலர் நம்புகிறார்கள், அது உண்மையில் "புவியியல் எல்லை" - அல்லது "நிலம்" என்று பொருள்படும் என்று கூறினார். இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் ஆளுநர் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.

அடுத்த சர்ச்சை, ஆளுநர் ஒரு மசோதவை நிலுவையில் வைத்திருந்தார் என்றால் அது நிராகரிக்கப்பட்டதாக பொருள் என்று ரவி கூறினார். இதற்கும் தி.மு.க மற்றும் அ.தி.மு.க கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ரவியின் நிலைப்பாடுகள் இந்திய ஆட்சியில் உள்ள கூட்டுறவு கூட்டாட்சிக்கு முரணானது என்று கண்டனம் தெரிவித்தனர். மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களை அவர் தடுத்து நிறுத்தியதால் நிலைமை மேலும் பதட்டமாக மாறியது.

இது அவருக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத தீர்மானத்தை ஸ்டாலின் கொண்டு வந்தார். பின்னர் பா.ஜ.க அல்லாத அனைத்து மாநிலங்களையும் இதேபோன்ற தீர்மானங்களை சட்டமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் கடந்த மே மாதம், குழந்தை திருமண வழக்கு மற்றும் இரு விரல் சோதனை குறித்து குற்றஞ்சாட்டி ரவி சர்ச்சையை ஏற்படுத்தினார். சிதம்பரம் நடராஜர் கோவில் அர்ச்சகர்கள் தொடர்பான சர்ச்சைக்குரிய குழந்தைத் திருமண வழக்கைச் சுற்றி ஆளுநரின் முந்தைய கூற்றுகளை அடுத்தடுத்த ஆதாரங்கள் நிராகரித்தன.

இந்த ஆண்டு ஜூன் மாதம், ரவி ஒரு நிகழ்வில், இந்தியாவில் மாநில அடையாளங்கள் நிர்வாக வசதியின் விளைவாகும், கலாச்சார பாதுகாப்பு அல்ல என்று கூறினார். மாநில அடையாளங்களை "கற்பனை" என்று அவர் நிராகரித்தது - மற்றும் அதன் விளைவாக "பிளவு செய்யும் உளவியல்" பற்றிய அவரது விமர்சனத்திற்கு தி.மு.க கடுமையான கண்டனம் தெரிவித்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

V Senthil Balaji
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment