/tamil-ie/media/media_files/uploads/2020/07/New-Project-2020-07-15T094900.294.jpg)
சென்னையில் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர், தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக மாணவி அளித்த புகாரின் பேரில் போலீசார் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளரைக் கைது செய்தனர்.
சென்னையைச் சேர்ந்த கே.மகேஷ் என்பவர் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர். இவர் சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள மாணவியின் வீட்டுக்கு சென்று தனிப்பட்ட முறையில் மாணவிக்கு தசைகள் தளர்வாக இருப்பதற்கான பயிற்சியை அளித்து வந்துள்ளார். இந்த நிலையில், பயிற்சியாளர் மகேஷ் மாணவியிடம் தவறாக நடந்துகொண்டதாக போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து போலீசார் கூறுகையில், ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் மகேஷ் கடந்த வெள்ளிக்கிழமை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள மாணவியின் வீட்டுக்கு சென்று பயிற்சி அளித்துள்ளார். அப்போது அவர் பயிற்சி அளிக்கும்போது மகேஷ் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக தந்தையிடம் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மாணவியின் தந்தை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் மகேஷ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார் என்று தெரிவித்தனர்.
பயிற்சியாளர் மகேஷ் மீது போக்ஸோ சட்டம் பிரிவு 3, 4ன் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.