/indian-express-tamil/media/media_files/WeiXUt2hfltSU7iOR2Al.jpg)
பெண்களுக்கு எதிராக ஆபாச கருத்து தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரிய மனு மீது உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக பா.ஜ.கவின் எச்.ராஜா தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடந்த 2018ல் பா.ஜ.க மூத்த தலைவர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பெண்கள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் கருத்துக்கள் பதிவிட்டதாக கூறப்பட்டது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் உள்பட தி.மு.க நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் புகார் அளித்தனர்.
ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கு எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகள் விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி எச்.ராஜா உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் எச்.ராஜா மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, எச்.ராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், எச்.ராஜா தெரிவித்த கருத்துக்கள் எந்த விதத்திலும் பெண்கள் கொச்சைப்படுத்தவில்லை என்றார்.
அப்போது குறிக்கிட்ட நீதிபதிகள், ” உங்கள் தரப்பு வாதங்கள் ஏற்க முடியாது. அரசியலில் இருப்பவர்கள் தாம் என்ன பேச வேண்டும் என்பதை உணர்ந்த எச்சரிக்கையுடன் பேச வேண்டும். இது போன்று பேசுபவர்கள் நிராகரிக்கப்பட வேண்டும் எச்.ராஜா தொடர்ந்து வழக்கை தள்ளுபடி செய்கிறோம் என்று தெரிவித்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.