Advertisment

போலீஸாருடன் கடும் மோதல் : நீதிமன்றத்தையும் அவமதித்தாரா ஹெச். ராஜா?

அதிர்ச்சியில் உறைந்த காவல்துறையினர்...

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
H. Raja, ஹெச். ராஜா

ஹெச். ராஜா நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார்

ஹெச்.ராஜா அவதூறு பேச்சு : இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தி முடிந்த மூன்றாம் நாள் விநாயகரை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம்.

Advertisment

காவல்துறையினரை மிரட்டிய ஹெச்.ராஜா

நேற்று புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மெய்யப்புரத்தில் விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இதில் கலந்து கொள்வதற்காக பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கலந்து கொண்டார்.

Read More; ஹெச்.ராஜா மீது 8 பிரிவுகளில் வழக்கு: வீடியோ விவகாரத்தில் அரசு அதிரடி Click Here

மெய்யப்புரத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் விநாயகர் சிலையை கொண்டு செல்வதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. அதையும் மீறி விநாயகர் சிலையை எடுத்துச் செல்வோம் என எச்.ராஜா கூற, அதனை தடுத்து நிறுத்தினர் காவல்துறையினர்.

அப்போது காவல் துறையின் அறிவுரையைக் கேட்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் ராஜா. மேலும் உயர் நீதிமன்றத்தின் தடை இருப்பதை காவல் துறை விளக்க முயற்சித்த போது  தகாத வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டார் ராஜா.

உயர் நீதிமன்றத்தைப் பற்றி அவதூறாக பேசிய ஹெச். ராஜாவினை கைது செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். உயர் நீதிமன்றம் மட்டுமின்றி காவல்துறை உயர் அதிகாரிகள் வீட்டில் நடைபெற்ற ஐடி ரெய்டுகள் குறித்தும் ஆபசமாக பேசியது அங்கிருப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

H Raja
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment