/indian-express-tamil/media/media_files/ObzEy0ze5MOCN15R4pHx.jpg)
தமிழகத்தில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இரண்டு போ் நேற்றுடன் (வெள்ளிக்கிழமை) (மே 31) பணி ஓய்வு பெற்றனா்.
மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இரண்டு போ் நேற்றுடன் (வெள்ளிக்கிழமை) (மே 31) பணி ஓய்வு பெற்றனா். தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநராக இருந்த ஹன்ஸ் ராஜ் வா்மா ஓய்வு பெற்றார். இதேபோல், தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் இயக்குநா் சி.உமாசங்கர் பணி ஓய்வு பெற்றார்.
ஹன்ஸ் ராஜ் வா்மா, 1986-ஆம் ஆண்டும், சி.உமா சங்கா், 1990-ஆம் ஆண்டும் தமிழகப் பிரிவு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளாக பணியில் சோ்ந்தனா். 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்த இருவரும் வெள்ளிக்கிழமையுடன் ஓய்வு பெற்றனா். அவா்களுக்குப் பதிலாக, பொறுப்பு அல்லது முழுநேர அதிகாரிகள் நியமனம் குறித்த அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.