அரிக்கொம்பன் யானையை எங்கே விட வேண்டும் என்பது வனத்துறை அதிகாரிகள் முடிவுக்கு உட்பட்டது என்றும் யானையை இங்கே விடவேண்டும் என எவரும் அவர்களது தனிப்பட்ட முடிவுக்கு உடன் பட முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு விளம்பரத்திற்காக தாக்கல் செய்யப்பட்ட வழக்காக தெரிகிறது எனவும் கருத்து தெரிவித்துள்ளனர் நீதிபதிகள்.
குமரி முத்துக்குளி மேல் கோதையாறு பகுதி ஒரு நெருக்கமான காட்டு பகுதி மற்றும் காணிகள் குடியிருப்பும் வெகு தொலைவில் தான் உள்ளது.இந்த பகுதி என்பது பசுமை மற்றும் நீரோடைகள் நிறைந்த பகுதி என்பதால். உணவு மற்றும் தண்ணீர் தேடி அரிக்கொம்பன் யானை மக்கள் குடியிருப்பு பகுதிக்கு செல்லும் வாய்ப்பு இல்லவே, இல்லை என அந்த பகுதியில் உள்ள பழங்குடி மக்கள் நம்புவது.வனத்துறை அதிகாரிகள் மத்தியில் ஒரு நிம்மதியான மன நிலையை ஏற்படுத்தியுள்ளது.
ரப்பர் பால் வெட்டும் காலம் என்பதால் அதிகாலையில் தலையில் மாட்டிய டார்ச் வெளிச்சத்தில் செல்லும் தொழிலாளர்கள் பயணிக்கும் இடங்களுக்கு வெகு தொலைவில் மேல் கோதையாறு காட்டு பகுதியில் இருப்பதால். ரப்பர் பால் வெட்டும் பணியாளர்கள் பயன் படுத்தும் டார்ச்சின் ஒளியால் அரிக்கொம்பன் யானைக்கு எவ்வித மான மாற்று சூழல் ஏற்பட வாய்ப்பு இல்லை என்பதையும்.
மேல் கோதையாறு மின் உற்பத்தி மையத்தில் இரவு நேரப் பணியில் இருப்பவர்கள் இரவு நேரத்தில் வெளியே நடமாட மாட்டார்கள் எனவே முத்துகுழி பகுதியில் அரிக்கொம்பன் யானையின் நடமாட்டம் எவ்விதமான பாதிப்பும் ஏற்படாது என அந்த பகுதியில் பணியில் இருக்கும் வனத்துறை காவலர்கள் தெரிவித்த தகவல்கள்.
மருத்துவ குழுவினருடன் விசாரிக்க முடிந்ததில் கிடைத்த தகவல்கள். அரிக்கொம்பன் இயல்பு நிலைக்கு மாறி வருகிறது. யானையின் உடலில் உள்ள காயங்கள் ஆறிவருவதும் இதற்கு காரணம். இந்த பகுதி சூழல் அரிக்கொம்பனுக்கு ஏற்ற நிலையில் இருப்பதுடன், அவ்வப்போது பெய்து வரும் மழையும் காரணமாக அமைந்துள்ளது. இரண்டு நாட்கள்களுக்கு மட்டும் யானைக்கு மருத்துவம் தேவைப்பட்டால் அதை வழங்க மருத்துவ குழுவினர் அங்குள்ளனர்.