/tamil-ie/media/media_files/uploads/2017/09/Sellur-raju.jpg)
மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் கொரோன பெருந்தொற்று சிறப்பு வங்கிக் கடன் திட்டத்தின் கீழ் 330 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூபாய் 2,00,80,000 கடன் தொகையினை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜீ வழங்கினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜீ," மத்திய அரசும் , மாநில அரசும் பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனது. அதன் ஒரு பகுதியாக, கூட்டுறவு வங்கிகள் மூலம் சாலையோர வியாபாரிகளுக்கும், சுயஉதவிக் குழுக்களுக்கும் எளிமையான முறையில் கடன்வழங்கும் திட்டத்தை தமிழக அரசு முடுக்கி விட்டுள்ளது. சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தாங்கள் வாங்கும் கடனை ஆறு மாதங்களுக்குப் பிறகு பணம் செலுத்தத் தொடங்கினால் போதுமானது. கடன்களுக்கான வட்டி 10.36% ஆக இருக்கும். ரேஷன் அட்டை நகல் வைத்திருக்கும் சாலையோர வியாபாரி, தேநீர் கடை உரிமையாளர், காய்கறி விற்பனையாளர் ஆகியோருக்கு குறைந்த வட்டி விகிதத்தில் ரூ.50,000 வரை கடன் வழங்கப்படும்" என்று அமைச்சார் தெரிவித்தார்.
பின்னர், கொரோனா தடுப்பு பணியாக மதுரை மாநகராட்சிக்குட்பட்ட மாடக்குளம் குடிசைப்பகுதியில் 467 குடியிருப்புகளில் உள்ள 2100 வீடுகளில் வசிப்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையிலான மாத்திரைகள் மற்றும் கபசுர குடிநீர் பொடியினை வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் ராஜீ கலந்து கொண்டார்.
இதற்கிடையே, மாநில அளவிலான வங்கிகளின் குழு கூட்டத்தில் பேசிய கலந்து கொண்ட முதல்வர், " 2020-21 ஆண்டிற்கான 4,21,404 கோடி ரூபாய் முதலீடு உள்ள ஆண்டுக் கடன் திட்டத்தை வெளியிட்டார். இந்த ஆண்டு கடன் திட்டத்தில், வேளாண் துறைக்கு 1,48,859 கோடி, குறு, சிறு தொழில்களுக்கு 92,075 கோடி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.