நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; கல்லூரி கல்வி இயக்குநரை குற்றவாளி என தீர்மானித்த சென்னை ஐகோர்ட்

பச்சையப்பன் அறக்கட்டளையின் கல்லூரிகளில் பேராசிரியர்கள் நியமன விவகாராத்தில், கல்லூரி கல்வி இயக்குநரை குற்றவாளி என தீர்மானித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பச்சையப்பன் அறக்கட்டளையின் கல்லூரிகளில் பேராசிரியர்கள் நியமன விவகாராத்தில், கல்லூரி கல்வி இயக்குநரை குற்றவாளி என தீர்மானித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
CH HC order

பச்சையப்பன் அறக்கட்டளை நடத்தும் கல்லூரிகளில் காலியாக உள்ள 132 பணியிடங்களுக்கு பேராசிரியர்கள் நியமனத்தை தடுத்ததற்காக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மாநில கல்லூரி கல்வி இயக்குநரை குற்றவாளி சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (ஏப்ரல் 26) தீர்மானித்தது.

Advertisment

நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே மீறியதற்காக ஏன் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதை விளக்க, ஜூன் 2 ஆம் தேதி சம்பந்தப்பட்ட அதிகாரி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி பரத சக்கரவர்த்தி உத்தரவிட்டார்.

"துரதிர்ஷ்டவசமான மற்றும் துணிச்சலான வகையில், கல்லூரி கல்வி செயலாளர், கல்லூரி கல்வி ஆணையர் ஆகியோர் முதலில் அறக்கட்டளைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் அதன்பின்னர்  காலியிடங்களை அறங்காவலர்கள் மட்டுமே நிரப்ப வேண்டும் என்பதிலும் உறுதியாக உள்ளனர்" என்று நீதிபதி கூறினார். இதையடுத்து, நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது தொடர தலைமை நீதிபதிக்கு முன்மொழியப்பட்டது.

ஏப்ரல் 24, 2024 தேதியிட்ட உத்தரவை மீறியதாக பச்சையப்பா அறக்கட்டளை தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனுவின் பேரில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. முன்னாள் நீதிபதியால் நிர்வகிக்கப்படும் அறக்கட்டளை, காலியிடங்களை நிரப்ப அனுமதித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisment
Advertisements

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, ​​34 நபர்களுக்கான இடஒதுக்கீடு பட்டியல் சரியாகப் பின்பற்றப்படாததால், நியமனங்களுக்கான ஒப்புதல் நிராகரிக்கப்பட்டதாகத், துறை சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் (DVAC) விசாரணை நடத்தி வருவதாக துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டது. இதை எதிர்த்து, தேர்வுக் குழுவில் ஒரு பகுதியாக இருக்கும் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகியால், முழுத் தேர்வையும் விதிகளின்படி நடத்தும்போது, ​​அத்தகைய குற்றச்சாட்டு அவமதிப்புக்கு சமமாகும் என்று அறக்கட்டளை கூறியது.

இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, நீதிமன்றத்தின் ஒரு டிவிஷன் பெஞ்ச் நியமனங்களுக்கு அனுமதி அளித்திருக்கும் போது, ​​அதை மறைமுகமாக நிறுத்த முடியாது என்று கூறியது. எனவே, 126 முன்மொழிவுகளையும் நிராகரிப்பதன் மூலம் அதிகாரத்தைப் பயன்படுத்துவது, இந்த நீதிமன்றத்தின் உத்தரவை வேண்டுமென்றே மீறுவதைத் தெளிவாகக் குறிக்கிறது என்று நீதிபதி கூறினார்.

கல்லூரி கல்வி இயக்குநர் எந்தவொரு திருத்தப்பட்ட உத்தரவையும் பிறப்பிக்க முடியும் என்பதைக் குறிப்பிட்ட நீதிமன்றம், அவரது நடத்தை வேண்டுமென்றே கீழ்ப்படியாமைக்கு சமமாகாது என்பதற்கான காரணத்தைக் காட்டுமாறு அதிகாரிக்கு உத்தரவிட்டது.

Madras High Court

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: