Advertisment

சீமான் தொடர்ந்த வழக்கு: நடிகை விஜயலட்சுமி ஆஜராக ஏப்ரல் 2-ம் தேதி வரை அவகாசம் - ஐகோர்ட் உத்தரவு

தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செயக் கோரி சீமான் தொடர்ந்த வழக்கில், விஜயலட்சுமி நேரில் ஆஜராஜ ஏப்ரல் 2-ம் தேதி வரை அவகாசம் அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

author-image
WebDesk
New Update
semaan madras hc vijayalakshmi

நடிகை விஜயலட்சுமி நேரில் ஆஜராஜ ஏப்ரல் 2-ம் தேதி வரை அவகாசம் அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செயக் கோரி சீமான் தொடர்ந்த வழக்கில், விஜயலட்சுமி நேரில் ஆஜராஜ ஏப்ரல் 2-ம் தேதி வரை அவகாசம் அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisment

திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதாக விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 2011-ம் ஆண்டு வழக்கு பதியப்பட்டது. 

 

பொய்யான குற்றம்சாட்டி தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நடிகை விஜயலட்சு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுருந்தது. 

இந்த வழக்கு இன்று (20.03.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பெங்களூருவில் வசித்து வரும் விஜயலட்சுமிக்கு நோட்டீஸ் அனுப்பியும், அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதற்கு, இந்த வழக்கில் விஜயலட்சுமி ஆஜராக விரும்பாவிட்டால் மனுவை ஏன் நிலுவையில் வைத்திருக்க வேண்டும் என கேள்வி எழுப்பிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், நடிகை விஜயலட்சுமி ஆஜராக ஏப்ரல் 2ம் தேதி வரை அவகாசம் அளித்து உத்தரவிட்டார். மேலும், அன்றைய தினம் நேரில் ஆஜராக முடியாவிட்டால் காணொலி மூலம் ஆஜராக அனுமதியளித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai High Court Seeman
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment