உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு அரசின் அனுமதி கட்டாயம்: புதிய விதிமுறைகளை அறிவித்த சுகாதாரத்துறை

இனி உயிருள்ள நன்கொடையாளர்களிடமிருந்து பெறப்படும் அனைத்து உறுப்பு தானங்களுக்கும் அரசின் அங்கீகாரக் குழுக்களின் ஒப்புதல் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இனி உயிருள்ள நன்கொடையாளர்களிடமிருந்து பெறப்படும் அனைத்து உறுப்பு தானங்களுக்கும் அரசின் அங்கீகாரக் குழுக்களின் ஒப்புதல் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
illegal sale of organs

சுகாதாரத்துறை செயலாளர் பி.செந்தில்குமார் பிறப்பித்த இந்த உத்தரவு, மனித உறுப்புகள் மற்றும் திசுக்களின் மாற்று அறுவை சிகிச்சைகளை முறையாக கண்காணிக்க மாநில மற்றும் மாவட்ட அளவிலான அங்கீகாரக் குழுக்களை மீண்டும் அமைத்துள்ளது.

தமிழகத்தில் சட்டவிரோத சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, உறுப்பு தானங்களை ஒழுங்குபடுத்தும் வகையில், புதிய மற்றும் கடுமையான விதிமுறைகளை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இனி உயிருள்ள நன்கொடையாளர்களிடமிருந்து பெறப்படும் அனைத்து உறுப்பு தானங்களுக்கும் அரசின் அங்கீகாரக் குழுக்களின் ஒப்புதல் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

சுகாதாரத்துறை செயலாளர் பி.செந்தில்குமார் பிறப்பித்த இந்த உத்தரவு, மனித உறுப்புகள் மற்றும் திசுக்களின் மாற்று அறுவை சிகிச்சைகளை முறையாக கண்காணிக்க மாநில மற்றும் மாவட்ட அளவிலான அங்கீகாரக் குழுக்களை மீண்டும் அமைத்துள்ளது. இந்த குழுக்களின் முக்கியப் பணி, மாற்று அறுவை சிகிச்சைக்கான விண்ணப்பங்களை சட்டப்பூர்வமாகவும், நெறிமுறைகளின்படியும் உள்ளதா என்பதை உறுதிசெய்து ஒப்புதல் அளிப்பது அல்லது நிராகரிப்பது ஆகும்.

புதிய விதிமுறைகளின் முக்கிய அம்சங்கள்:

இதுவரை, நன்கொடையாளர்கள் ரத்த உறவினர்கள் அல்லது வாழ்க்கைத் துணைவர்கள் என்றால், பெரும்பாலான மருத்துவமனைகள் அரசின் ஒப்புதல் பெறாமல் அறுவை சிகிச்சைகளை நடத்தி வந்தன. இந்த விதிமீறல்களைத் தடுக்கும் வகையில், அனைத்து உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கும் அரசின் ஒப்புதலைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் ரூ. 2,000 கட்டணம் வசூலிக்கப்படும். இதில் பாதி அரசுக்குச் செலுத்தப்பட்டு, மீதி நிதி குழுவின் நிர்வாக செலவுகள் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்களுக்குப் பயன்படுத்தப்படும்.

Advertisment
Advertisements

தமிழ்நாடு மற்றும் வெளிமாநில அல்லது வெளிநாட்டு நோயாளிகளுக்கான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை விண்ணப்பங்களை மாநில அளவிலான குழு ஆய்வு செய்யும். அதே சமயம், தமிழகத்தைச் சேர்ந்த நோயாளிகளுக்கான விண்ணப்பங்களை நான்கு பிராந்திய குழுக்கள் (சென்னை, தஞ்சாவூர், கோவை, மதுரை) கையாளும்.

உறுப்பு நன்கொடையாளர் மற்றும் பெறுநருக்கு இடையே கட்டாயமோ அல்லது வர்த்தக நோக்கோ இல்லை என்பதை உறுதிப்படுத்த, குழுக்கள் இருவரையும் தனித்தனியாக விசாரிக்கும்.

ஹூமன் லியூகோசைட் ஆன்டிஜென் (Human leukocyte antigen) சோதனைகள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவமனை அல்லாத ஒரு ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் விரிவான பதிவுகளை பராமரித்து, மாதந்தோறும் உரிய குழுக்களுக்கு அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கும் இந்த விதிகள் பொருந்தும்.

இந்த புதிய உத்தரவுகள், உறுப்பு தானத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதோடு, சட்டவிரோத நடவடிக்கைகளை முழுமையாகத் தடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Organ donation

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: