/indian-express-tamil/media/media_files/olf13GM3ugX6curWOr1m.jpg)
தமிழ்நாட்டில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல இடங்களில் 100 டிகரி பாரன்ஹீட் குறையாமல் வெப்பம் பதிவாகி வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பகல் நேரங்களில் வீடுகளுக்கு உள்ளே முடங்கி உள்ளனர்.
குறிப்பாக ஈரோடு, மதுரை, சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் வெயில் கடுமையாக உள்ளது. நேற்று ஈரோட்டில் அதிகபட்சமாக 109.40 டிகிரி வெப்பம் பதிவாகியது. வெப்ப அலையும் வீசுகிறது. இதனால் பகல் நேரங்களில் மக்கள் காரணம் இன்றி வெளியில் செல்ல வேண்டாம் என்றும் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.
இந்த நிலையில், இன்று (ஏப்ரல் 23) தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா, உத்தரப் பிரதேசம், ஒடிசா, பீகார் ஆகிய மாநிலங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நேற்று அதிக வெப்ப அலை வீசிய நகரங்களில் ஈரோடு 3-வது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் 110 டிகிரி வெப்பநிலை உடன் புவனேஸ்வர் நகரும், இரண்டாவது இடத்தில் ஆந்திராவின் கடப்பாவும் உள்ளன. இன்று முதல் 26-ம் தேதி வரை வெப்ப அலை தொடரும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.