Red Alert : தமிழகத்தில் 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்... இந்த மாவட்டங்களில் கனமழை அடிச்சி நொறுக்கும்!

தமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், கோவை, நீலகிரிக்கு 3 மாநில பேரிடர் மீட்பு படை அங்கு விரைந்துள்ளது. மேலும், ஊட்டி வால்பாறைக்கு ஒரு தேசிய பேரிடர் மீட்பு படையும் விரைந்துள்ளது.

தமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், கோவை, நீலகிரிக்கு 3 மாநில பேரிடர் மீட்பு படை அங்கு விரைந்துள்ளது. மேலும், ஊட்டி வால்பாறைக்கு ஒரு தேசிய பேரிடர் மீட்பு படையும் விரைந்துள்ளது.

author-image
WebDesk
New Update
Tn Red alert

Red Alert : தமிழகத்தில் 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் - வானிலை ஆய்வு மையம்

Advertisment
தமிழ்நாட்டில் இன்று கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருப்பூர், திண்டுக்கல்,தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. இதேபோல் நாளை மற்றும் நாளை மறுநாள், கோவை, நீலகிரி மாவட்டங்களில் கன முதல் அதி கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் திண்டுக்கல்,தேனி, மற்றும் தென்காசி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
நாளை மற்றும் நாளை மறுநாள் திருப்பூர், நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் கனமழை பொழிய வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டு உள்ளது. சென்னை மற்றும் புறநகரில் இன்று வானம் மேகமூட்டமாக காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 
கோடை மழை சில பகுதிகளில் அதீதமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்த நிலையில், அரக்கோணத்தில் இருந்து தேசிய பாதுகாப்புப்படையினரில் கோவை, நீலகிரிக்கு தலா ஒரு குழு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் மாநில பேரிடர் மேலாண்மை குழு வீரர்களில் தலா ஒரு குழு கோவை மற்றும் திண்டுக்கல்லுக்கும், நீலகிரிக்கு 2 குழுக்களும், என 160 வீரர்கள் ராணிப்பேட்டையில் இருந்து சென்றனர்.
நேற்றிரவு சென்னை மாநகர் முழுவதும் கனமழை வெளுத்து வாங்கியதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. பூந்தமல்லி, போரூர், உள்ளிட்ட பகுதிகளில் கனமழையால் குளிர்ச்சி நிலவியது. கனமழை காரணமாக திருச்சி, மதுரை மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டன. தரையிறங்க தாமதமானதால், விமானங்கள் வானிலேயே வட்டமடித்தன.
Nilgiris Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: