தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியின் கடற்பகுதியில் காற்றழுத்த தாழ்வுமண்டலம் வலுப்பெற்றதால், அதைச் சுற்றியுள்ள நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் சில தினங்களாக கனமழை பெய்துவருகிறது. மேலும், கனமழை காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பாதுகாப்பு கருதி, தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கன மழையின் காரணமாக இன்று (14.03.2018) தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. 11-ம் வகுப்பு ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு, வழக்கம்போல நடைபெறும். தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் தேர்வுப் பணியில் உள்ள ஆசிரியர்கள், வழக்கம்போல தேர்வு மையங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
எனவே, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மட்டும் வழக்கம் போல் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Heavy rain government announced holiday for school students
பட்டிமன்ற சாம்ராஜ்யத்தின் முடிசூடா மன்னர் .. சாலமன் பாப்பையா ஸ்டோரி!
கொரோனா தடுப்பூசி : வதந்திகள் பரப்புவோருக்கு உள்துறை அமைச்சகம் கடும் எச்சரிக்கை
எல்லோரும் தேடிக்கொண்டிருந்த பிக் பாஸ் எடிட்டர் இவர்தான் – பாலாஜி வெளியிட்ட வைரல் புகைப்படம்
தேங்காய் இல்லாத பொட்டுக்கடலை சட்னி. புதுசா இருக்குல .. டேஸ்டும் அப்படித்தான்!
ரியல் எஸ்டேட் மோசடி: தமிழகத்தில் 3850 ஏக்கர் நிலத்தை முடக்கிய அமலாக்கத் துறை