கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக வெப்பச் சலனம் காரணமாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
Advertisment
கடந்த வாரம் இடையர்பாளையம், டிவிஎஸ் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. அதற்கு முன்பு சூலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
அதனை தொடர்ந்து கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மதியத்திற்கு மேல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் இன்று மாநகரில், ரயில் நிலையம், ராமநாதபுரம், காந்திபுரம், சிங்காநல்லூர், உக்கடம், செல்வபுரம் ஆகிய பகுதிகளிலும், புறநகரில் தடாகம், சரவணம்பட்டி கீரணத்தம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது.
செல்வபுரம் சுற்றுவட்டார பகுதியில் பயங்கர சத்தத்துடன் இடி மற்றும் மின்னலுடன் கனமழை பெய்தது. அதே சமயம் பேரூர் பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் மரங்கள் எல்லாம் வேருடன் சாயும்படி காற்றிற்கு ஆடியது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“