Advertisment

இன்று எந்த மாவட்டங்களில் மழை? கன்னியாகுமரியில் 2-வது நாளாக பள்ளிகள் விடுமுறை

கன்னியாகுமரியில் தொடர் மழை காரணமாக இன்று 2-வது நாளாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
cheenai rain school students leave issues

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று(அக்.4) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Advertisment

இதன் காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நீலகிரி, கோவை, தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது கனமழையும், மிதமான மழையும் பெய்து வருகிறது. 

குறிப்பாக கன்னியாகுமரியில் கடந்த 3 தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆறுகள், குளங்கள் வேகமாக நிரம்பி வருகிறது. சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. குழித்துறை தாமிரபரணி ஆறு, வள்ளியாறு, பழையாறு ஆகிய ஆறுகளில் வெள்ளம் பாயத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட பள்ளிகளுக்கு இன்றும் (அக்.4) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காலாண்டு விடுமுறை முடிந்து நேற்று முதல் தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் கன்னியாகுமரி மாவட்ட பள்ளிகளுக்கு மழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து சாலைகளில் வெள்ளம் மற்றும் காலையிலும் மிதமான மழை பெய்து வருவதால் இன்றும் 2-வது நாளாக விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அறிவித்தார். 

தொடர்ந்து தமிழகத்தில் இன்று திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Rain In Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment