தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
தமிழகத்தின் கன்னியாகுமரி, நெல்லை, திண்டுக்கல், கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் இயக்குநர் அளித்த பேட்டியில், மத்திய மேற்கு வங்க கடல், தெற்கு ஆந்திரா கடல் பகுதியில் மேல் அடுக்கு சுழற்சி நிலவுவதாக கூறினார். இதனால், தமிழகத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் கன்னியாகுமரி மற்றும் அதனையொட்டி உள்ள பகுதியில் கடல் காற்று மணிக்கு 35 கிலோ மீட்டர் முதல் 55 கிலோ மீட்டர் வேகம் வரை வீசும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.