தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு; மார்ச் 11-ல் 4 தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் - வானிலை ஆய்வு மையம்

மார்ச் 11-ம் தேதி 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என்றும் மார்ச் 11-ம் தேதி தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய 4 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
rain alert

தமிழ்நாட்டில் நாளை மார்ச் 10-ம் தேதி முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழ்நாட்டில் நாளை மார்ச் 10-ம் தேதி முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், மார்ச் 11-ம் தேதி 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என்றும் மார்ச் 11-ம் தேதி தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய 4 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டுல் அடுத்த 7 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது. அதில் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

09.03.2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவான லேசான பனிமூட்டம் காணப்படும்.

10.03.2025: கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Advertisment
Advertisements

11.03.2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

12.03.2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

13.03.2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

14.03.2025 மற்றும் 15.03.2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

தமிழ்நாட்டில் அடுத்த 5 தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றி சென்னை வானிலை ஆய்வும் மையம் முன்னறிவித்துள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கு: 

09.03.2025 முதல் 11.03.025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.


சென்னை மற்றும் புறநகர் பகுதிக்கான   வானிலை முன்னறிவிப்பு:

இன்று (09-03-2025): வானம் ஓரளவு  மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில், பொதுவாக லேசான பனி ட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 - 34° செல்சியஸை ஓட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 - 24° செல்சியஸை ஓட்டியும் இருக்கும்.

நாளை (10-03-2025): வானம் ஓரளவு  மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 - 34° செல்சியஸை ஓட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 - 24° செல்சியஸை ஓட்டியும் இருக்கும்.

rain

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: