/tamil-ie/media/media_files/uploads/2018/05/Met.jpg)
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த 24 மணி நேரத்தில் சில இடங்களில் மழை பெய்துள்ளது. மேலும் 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக வேலூரில் 2 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. அதேபோல் வேலூர் மாவட்டம், விரிஞ்சிபுரம் மற்றும் மதுரை மாவட்டம் சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளில் 1 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
மேலும் சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.