புதுச்சேரியில் காலை முதல் கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது.

புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Puducher

புதுச்சேரியில் அதிகாலை முதல் பெய்து வரும் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

Advertisment

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (அக்.19) கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி புதுச்சேரியில் நகரம் மற்றும் கிராமப்புறங்களில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. 

சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியுற்றனர். ரெயின்போ நகர், கிருஷ்ணா நகர், பாவாணர் நகர் போன்ற தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் வீடுகளை விட்டு மக்கள் வெளியே வர முடியாத சூழல் உருவாகியுள்ளது. 

மேலும் கனமழை காரணமாக அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் இன்று சனிக்கிழமை (19/10/24) விடுமுறை அளிக்கப்படுவதாக கல்வித் துறை  அமைச்சர் ஆ. நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். 

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us: