/indian-express-tamil/media/media_files/2025/04/18/HGh29ZoVlRnpAQfDTyhW.jpg)
கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு இன்று (29.05.2025) மற்றும் நாளை (30.05.2025) அதி கன மழைக்கான "ரெட் அலர்ட்" விடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்துக்கு மீண்டும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் உதகையில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் வியாழக்கிழமை (29.05.2025) மூடிவைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிடுள்ளது.
தமிழகம் உள்பட தென்மாநிலம் முழுவதும் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது.
இதனிடையே கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு இன்று (29.05.2025) மற்றும் நாளை (30.05.2025) அதி கன மழைக்கான "ரெட் அலர்ட்" விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் உதகையில் நாளை அனைத்து சுற்றுலா தளங்களும் மூடப்படுவதாகவும், உதகை கூடலூர் தேசிய நெடுஞ்சாலைகள் இரவு நேர போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார் .
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.