கனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்தனர்.

தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்தனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil nadu weather forecast updates

கனமழை காரணமாக நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்தனர்.

Advertisment

பள்ளிகளுக்கு விடுமுறை :

தமிழகத்திற்கான வடகிடக்கு பருவமழை மாநிலம் முழுவதும் நவம்பா் 1ம் தேதி தொடங்கியது. சென்னை உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் நல்ல மழைப் பொழிவு காணப்படுகிறது.

இந்நிலையில், நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன்,  தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் தொடங்கி மாநிலத்தின் உள் பகுதிக்கு படிப்படியாக மழைப்பொழிவு இருக்கும் என்று கூறினார்.

Advertisment
Advertisements

இதனையடுத்து, நேற்று இரவு முதல் திருவாரூா், நாகை,புதுக்கோட்டை போன்ற மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது.இதன் காரணமாக திருவாரூா் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு  விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியா் நிா்மல் ராஜ் உத்தரவிட்டுள்ளாா்.

அதே போல்,  கனமழை காரணமாக நாகை மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து ஆட்சியர் சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Tamilnadu Weather Rain In Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: