/indian-express-tamil/media/media_files/2024/10/20/BRA8CMxnp79RD9FgpFRS.jpeg)
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரிக்கு வந்த தமிழக அரசு போக்குவரத்து கழக நகர பேருந்தில் ஒழுகிய மழைநீரால் பயணிகள் நின்றவாறு பயணம் செய்தனர்.
திருப்பத்தூர் பணிமனையில் இருந்து திருப்பத்தூர்- சிங்கம்புணரி- கொட்டாம்பட்டி வரை 11 aaம் எண் கொண்ட நகர பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இரவு சிங்கம்புணரியில் இருந்து கொட்டாம்பட்டி வரும் போது மழை பெய்ததால் இருக்கைகள் முழுவதும் நனைந்து ஒழுகிய நிலையில் வந்தது. மீண்டும் 10 பயணிகளை ஏற்றிக்கொண்டு சிங்கம்புணரி வந்தபோது கனமழை பெய்தது. கனமழை பெய்ததால் மீண்டும் ஆங்காங்கே ஒழுகிய நிலையில், இருக்கைகள் இருந்தும் பயணிகள் அமராமல் நின்று கொண்டே சிங்கம்புணரி வந்து சேர்ந்தனர்.
வடகிழக்கு பருவமழை காலம் என்பதால் திருப்பத்தூர் பணிமனையில் மிக மோசமாக உள்ள அரசு பேருந்துகளை சரி செய்து பேருந்தின் உள்ளே ஒழுகாமல் பயணிகள் இருக்கையில் அமர்ந்து வருவதை உறுதி செய்ய வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.