/indian-express-tamil/media/media_files/2024/11/28/IWJ3xsSKeUEPW1BDjVT5.jpg)
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 81 சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சி வெற்றி பெற்றது. இந்தக் கூட்டணி 56 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்தது.
ஜேஎம்எம் 34 இடங்களும், காங்கிரஸ் 16, ராஷ்டிரிய ஜனதாதளம் 4, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் 2 இடங்களில் வெற்றி பெற்றன. பா.ஜ.க கூட்டணி 24 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. பர்ஹைட் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் ஹேமந்த் சோரன் 39 ஆயிரத்து 791 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்தியா கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து மாநில ஆளுநர் சந்தோஷ்குமார் கங்க்வாரை ஹேமந்த் சோரன் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
இதையடுத்து ஹேமந்த் சோரன் முதல்வராக பதவியேற்கும் விழா இன்று (நவ.28) மாலை 4 மணிக்கு மொரபாதி மைதானத்தில் நடக்கிறது. இந்த விழாவில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி,மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் சரத் பவார்,மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி,மேகாலயா முதல்வர் கான்ட்ராட் சங்மா,பஞ்சாப் முதல்வர் பக்வந்த் சிங் மான்,இமாச்சல் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு, சிபிஐ(எம்எல்) பொது செயலாளர் தீபாங்கர் பட்டாச்சார்யா, ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால்,
சிவசேனா(உத்தவ்) தலைவர் உத்தவ் தாக்கரே,அகிலேஷ் யாதவ் எம்பி, பிடிபி தலைவர் மெகபூபா முப்தி, தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
ஹேமந்த் சோரன் பதவியேற்கும் விழாவில் கலந்து கொள்ள உதயநிதி ஸ்டாலின் இன்ற ஜார்கண்ட் செல்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.