Advertisment

குழந்தைகள் கடத்தலை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டது - ஐகோர்ட் வேதனை

நாட்டின் எதிர்காலம் கடத்தப்படுவதை பாதுகாக்க அரசு தவறியுள்ளதாக நீதிபதி வேதனை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today live updates

Tamil Nadu news today live updates

குழந்தைகள் கடத்தலை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து தமிழக உள்துறை மற்றும் சமூக நலத்துறை முதன்மை செயலாளர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் எக்ஸ்னோரா நிர்மல் என்பவர் கடந்த 2016 ஆம் ஆண்டு தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், சென்னையில் பெற்றோருடன் சாலையோரத்தில் வசிக்கும் குழந்தைகள் கடத்தப்படுகின்றனர்.

அந்த குழந்தைகளை மீட்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக சென்னை காவல் ஆணையரிடம் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில், எஸ்பிளனேடு பகுதியில் சாலையோரத்தில் பெற்றோருடன் வசித்து இரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த 8 மாத குழந்தை ராகேஷ், 9 மாத குழந்தை சரண்யா ஆகியோர் 2016 ஆம் ஆண்டு கடந்த பிப்ரவரி மாதம் மர்ம நபர்களால் கடத்தப்பட்டனர்.

இந்த குழந்தைகளை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, மேலும் குழந்தை கடத்தலை தடுக்க காவல்துறை தீவிர நடவடிக்கை மேற்கொள்ள் சென்னை காவல் ஆணையர், எஸ்பிளனேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், குழந்தைகள் கடத்தலை தடுக்க தனி படையை உருவாக்க தமிழக அரசுக்கு 2016 ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.

மேலும் குழந்தை கடத்தலை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, குழந்தை கடத்தல் குறித்த அறிக்கை தாக்கல் செய்ய அரசு தரப்பில் கூடுதல் அவகாசம் கோரப்பட்டது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், குழந்தைகள் கடத்தலை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டதாக வேதனை தெரிவித்தனர். மேலும், மற்ற வழக்குகளை போல அல்லாமல், இந்த வழக்கிற்கு அதீத முக்கியத்துவத்தை அரசு வழங்கியிருக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இந்த பிரச்சனையின் முக்கியத்துவத்தை தமிழக அரசு புரிந்துகொள்ளவில்லை எனவும், நீதிமன்றம் அழுத்தம் கொடுத்து தான் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியதில்லை. இந்த விவகாரத்தில் அரசே தாமாக முன்வந்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

நாட்டின் எதிர்காலம் கடத்தப்படுவதை பாதுகாக்க அரசு தவறியுள்ளதாகவும் நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

இதையடுத்து, குஜராத்திற்கு தமிழக குழந்தைகள் கடத்தப்பட்டிருப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவித்து அது தொடர்பாக அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், 100 க்கும் மேற்பட்ட தமிழக குழந்தைகள் விமான நிலையம் மூலம் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்படுவதற்கான நோக்கம் குறித்து அரசுக்கு கேள்வி எழுப்பினார்.

மேலும், நீதிபதிகள் மற்றும் காவல் துறையினரின் குழந்தைகள் பாதுகாப்பாக இருந்தால் மட்டும் போதாது. இந்தியாவின் கடைசி குடிமகனின் குழந்தை பாதுகாப்பாக இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

பின்னர் உத்தரவிட்ட நீதிபதிகள், தமிழகத்தில் குழந்தை கடத்தல் தடுக்க எடுத்த நடவடிக்கை உள்ளிட்ட விவகாரம் குறித்து தமிழக உள்துறை மற்றும் சமூக நலத்துறை முதன்மை செயலாளர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை செப்டம்பர் 24 தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment