Advertisment

சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு ரூ. 1000 உண்டு.. அனுமதி அளித்தது ஐகோர்ட்!

எந்த பொருட்களும் வாங்கவேண்டும் என்ற அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 1000 ரூபாய்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
admk manifesto

admk manifesto

தமிழக அரசின் கோரிக்கை ஏற்று சர்க்கரை குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Advertisment

தமிழக அரசு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக 1000 ரூபாய் அறிவித்தது.இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 1000 வழங்கலாம் என்றும் , வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க தடை உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது.

இதையடுத்து தமிழக அரசு இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்தது இந்த தடையை நீக்கக் கோரி அதிமுக வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம் என்பவர் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.

இந்த நிலையில், சர்க்கரை மட்டும் வாங்கும் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளதால் அவர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்க வேண்டுமென தமிழக அரசு வழக்கறிஞர் மனோகரன் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார்.

pongal gift 1000 : சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு!

இதனை மனுவாக தாக்கல் செய்தால் விசாரிப்பதாக நீதிபதிகள் ராஜமாணிக்கம், சத்தியநாராயணன் அமர்வு தெரிவித்திருந்தது.இதையடுத்து நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் முன்பு அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, ‘சர்க்கரை வாங்கும் ரே‌சன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் ரொக்கப்பரிசு வழங்க அனுமதி கேட்டு தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக இன்று விசாரணைக்கு ஏற்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.

இதனையடுத்து இந்த வழக்கு இன்று அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. விசாரணைக்கு பின்பு பேசிய நீதிபதிகள், சர்க்கரை அட்டைதாரர்களுக்கு , எந்த பொருட்களும் வாங்கவேண்டும் என்ற அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 1000 ரூபாய் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இதுகுறித்து பேசிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், ”ஓட்டுக்காக மட்டுமே பொங்கல் பரிசுத் தொகை ரூ.1000 வழங்கப்படுவதாக பொதுமக்கள் எண்ணுகிறார்கள். இலவச திட்டங்களை செயல்படுத்தும் போது பயனாளிகளை வரையறை செய்யவேண்டும்.

வரையறை இல்லாமல் இலவச திட்டங்களை செல்படுத்துவது சரியான நடவடிக்கை இல்லை. எனவே சர்க்கரை குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசுத் தொகை வழங்க வேண்டும்” என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து பொங்கல் பரிசை தடை செய்ய கோரி யாராவது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தல் தங்களின் தரப்பையும் கேட்க வேண்டுமென்று தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Chennai High Court Tamilnadu Pongal Festival
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment