நடிகை விந்தியா குறித்து அவதூறு பேச்சு: தி.மு.க. நிர்வாகிக்கு பிணை மறுப்பு

நடிகை விந்தியா குறித்து அவதூறாக பேசிய வழக்கில் திமுக நிர்வாகிக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது.

நடிகை விந்தியா குறித்து அவதூறாக பேசிய வழக்கில் திமுக நிர்வாகிக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Actress Vinthiya

குடியாத்தம் குமரன்- விந்தியா

நடிகை விந்தியா குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் திமுக நிர்வாகி குடியாத்தம் குமரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Advertisment

இதையடுத்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பிணை கோரி குடியாத்தம் குமரன் மனுத்தாக்கல் செய்தார். அப்போது அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளரும், நடிகையுமான விந்தியா தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டீக்காராமன், திமுக நிர்வாகி குடியாத்தம் குமரன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதற்கிடையில் மதுரை அதிமுக மாநாட்டில் திமுகவை கடுமையாக தாக்கிப் பேசினார் என திமுகவினரும் விந்தியா மீது குற்றச்சாட்டை முன்வைத்துவருகின்றனர்.
மதுரை எழுச்சி மாநாட்டில் விந்தியா, விக் வைத்த தளபதி நான் அவரை சொல்லவில்லை என கலாய்த்துப் பேசினார் என்பது நினைவு கூரத்தக்கது.

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dmk Aiadmk High Court

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: