/indian-express-tamil/media/media_files/2hdiogCm7hYaPaZf18WK.jpg)
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
மதம் மாறி திருமணம் செய்துகொண்ட கணவரின் உடலுக்கு இந்து முறைப்படி சடங்கு செய்து முஸ்லிம் மதப்படி அடக்கம் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
காரைக்குடியைச் சேர்ந்த தமது கணவர் பாலசுப்ரமணியன் (எ) அன்வர் உசேன், மதம் மாறி சையத் அலி பாத்திமா என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர் திடீரென இறந்ததால், அவரை இந்து முறைப்படி அடக்கம் செய்ய உடலை ஒப்படைக்கக் கோரி முதல் மனைவி சாந்தி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, பாலசுப்ரமணியன் உடலை இந்து முறைப்படி சடங்கு செய்து முஸ்லிம் மதப்படி அடக்கம் செய்ய உத்தரவிட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.