விடுதலையான மேலவளவு கொலைக் குற்றவாளிகள்; கிராமத்துக்குள் நுழையக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு
மேலவளவு படுகொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த குற்றவாளிகள் 13 பேர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உயர் நீதிமன்றம் அவர்களை இந்த வழக்கு முடியும்வரை மேலவளவு கிராமத்துக்குள் நுழையக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.
மேலவளவு படுகொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த குற்றவாளிகள் 13 பேர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உயர் நீதிமன்றம் அவர்களை இந்த வழக்கு முடியும்வரை மேலவளவு கிராமத்துக்குள் நுழையக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.
Tamil News Today Live updates: போலீசாருக்கு கவுன்சிலிங்
மேலவளவு படுகொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த குற்றவாளிகள் 13 பேர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உயர் நீதிமன்றம் அவர்களை இந்த வழக்கு முடியும்வரை மேலவளவு கிராமத்துக்குள் நுழையக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.
Advertisment
மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள மேலவளவு கிராமம் பட்டியல் இனத்தைச் சேர்ந்த முருகேசன் பஞ்சாயத்து தலைவர் ஆனதை எதிர்த்து அந்த கிராமத்தின் ஆதிக்க சாதியைச் சேர்ந்த கும்பலால் முருகேசன் உள்ளிட்ட 7 பேர் 1997 ஆம் ஆண்டு வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். இந்த விவகாரம் தேசிய அளவில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த படுகொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட ராமர், சின்ன ஒடுங்கன், செல்வம் உள்ளிட்ட 17 பேருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. அதனை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.
இந்த வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த குற்றவாளிகளில் வயது மூப்பு காரணமாக ஏற்கெனவே மூன்று பேர் விடுதலை செய்யப்பட்டனர். 14 பேரில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்ற 13 பேரும் சிறை தண்டனை அனுபவித்து வந்தனர். இந்த நிலையில், எம்.ஜி.ஆர் பிறந்தநாள் நூற்றாண்டை முன்னிட்டு பத்தாண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்ததில் மேலவளவு வழக்கு குற்றவாளிகள் 13 பேரும் முன்கூட்டியே இந்த மாதம் விடுதலை செய்யப்பட்டனர்.
Advertisment
Advertisements
தேசிய அளவி பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய மேலவளவு படுகொலை வழக்கில், தண்டனை பெற்ற குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டது சட்டவிரோதமானது என வழக்கறிஞர் பொ.ரத்தினம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இவர்களின் விடுதலையை எதிர்த்து பல்வேறு தலித் அமைப்புகள், அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மேலவளவு வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்ததுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியது.
தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், “2008 ஆம் ஆண்டு அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மேலவளவு கொலை வழக்கில் சிறையில் இருந்த 3 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் பின்பற்றப்பட்ட நடைமுறையே தற்போது 13 பேர் விடுதலை செய்யப்பட்டதிலும் பின்பற்றப்பட்டது. முன்கூட்டியே விடுதலை செய்யப்படுபவர்களின் பட்டியலை தயாரிக்கும் குழு 2018 பிப்ரவரி வரை 1,769 பேர்களை தேர்வு செய்தது. அவர்களில் 1,649 பேர்களை முன்விடுதலை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. மீதமுள்ள 97 பேர் நிராகரிக்கப்பட்டனர். இதில் 8 பேர் உயிரிழந்தனர். 15 பேர் விடுதலை மீதான முடிவு இன்னும் பரிசீலனையில் உள்ளது. மேலவளவு படுகொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த 13 பேரும் 14 ஆண்டிலிருந்து 17 ஆண்டுகள் வரை சிறையில் இருந்துள்ளனர். அவர்களுக்கு விடுப்புக்காலமும் அதிகம் உள்ளது. அதோடு, முன்கூட்டிய விடுதலை முன்னுரிமை எதுவும் பின்பற்றப்படுவதில்லை. இந்த 13 பேர் விடுதலைக்குப் பின்னர் எவ்விதமான சட்டம் ஒழுங்கு பிரச்னையும் ஏற்படவில்லை” என தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசின் பதில் மனு தாக்கலைத் தொடர்ந்து, உயர் நீதிமன்ற நீதிபதிகள், புதன்கிழமை மீனுடும் இந்த வழக்கை விசாரித்தனர். விசாரணைக்குப் பிறகு, நீதிபதிகள், மேலவளவு கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 13 பேரும் வழக்கு முடியும் வரை மேலவளவு கிராமத்திற்குள் நுழையக் கூடாது என்றும் குற்றவாளிகள் இந்த வழக்கில் அடுத்த விசாரணையின்போது நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். மேலும், உயர் நீதிமன்றம் மேலவளவு கொலை வழக்கு குற்றவாளிகள் முன்விடுதலை தொடர்பான அரசாணைக்கு தடை விதிக்கவும் மறுப்பு தெரிவித்துள்ளது.