Advertisment

நீர்நிலை பகுதியில் சாஸ்த்ரா பல்கலை.? தமிழக அரசுக்கு ஐகோர்ட் முக்கிய உத்தரவு

சாஸ்த்ரா பல்கலைக்கழகம் நீர்நிலையில் அமைந்துள்ளதா?; ஆவணங்களைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

author-image
WebDesk
New Update
நீர்நிலை பகுதியில் சாஸ்த்ரா பல்கலை.? தமிழக அரசுக்கு ஐகோர்ட் முக்கிய உத்தரவு

High court orders Tamilnadu Govt to produce Sastra university water encroachment evidence: தஞ்சாவூரில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதி நீர் நிலையில் அமைந்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக உரிய ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

தஞ்சாவூர் மாவட்டம் திருமலை சமுத்திரம் கிராமத்தில் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைகழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதி கட்டிடங்கள் நீர் நிலைகளில் அமைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தமிழக அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும் என பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்தன.

இதையும் படியுங்கள்: விமானத்தைப் போல ரயில் சேவையையும் தனியாருக்கு கொடுக்க முயற்சி: தொழிற்சங்கம் குற்றச்சாட்டு

இந்தநிலையில், கடந்த 35 ஆண்டுகளாக தாங்கள் அனுபவித்து வரும் 31.37 ஏக்கர் பரப்பளவிலான அரசு புறம்போக்கு நிலத்தை தங்களுக்கு ஒதுக்கும்படி சாஸ்த்ரா பல்கலைக்கழகம் அரசிடம் கோரிக்கை வைத்தது. மேலும் அதற்கான தொகையை செலுத்துவதாகவும் கூறியது. ஆனால் இந்த கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்துடன், மேலும், நான்கு வாரங்களுக்குள் இடத்தை காலி செய்யும்படி தஞ்சாவூர் வட்டாட்சியர் நோட்டீஸ் அனுப்பினார்.

இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி சாஸ்த்ரா பல்கலைக்கழக உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு சில நாட்களுக்கு முன் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ​​அரசு ஒதுக்கிய நிலத்திற்கு பதிலாக மாற்று இடம் வழங்க தயாராக இருப்பதாக சாஸ்த்ரா பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நிலம் இடமாற்று தொடர்பான முன்மொழிவுகளை அனுமதித்து மே மாதம் அரசு இயற்றிய அரசாணையின் பார்வையில், மாற்று நிலத்தை வழங்குவதற்கான பல்கலைகழகத்தின் முன்மொழிவை பரிசீலிக்குமாறு அரசுக்கு வழிகாட்டுதல் கோரி பல்கலைகழகத்தால் முன்வைக்கப்பட்ட ஒரு மனு மீண்டும் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் கடந்த 3 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு நிலத்தை 35 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமித்து, கட்டிடங்களை எழுப்பிவிட்டு, தற்போது மாற்று இடங்களை வழங்குவதாக பல்கலைக்கழக தரப்பு கூறுவதை ஏற்க முடியாது. இவ்வாறு செய்வது ஆக்கிரமிப்பை ஊக்குவிப்பதாக அமையும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மாற்று இடம் வழங்கும் தங்கள் கோரிக்கை பரிசீலிக்கப்படுமா என்பதை அரசு விளக்கினால், இந்த வழக்கை நடத்துவது ஏதுவாக இருக்கும் என பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு தமிழக அரசு தரப்பில், ஆக்கிரமிப்பின் மீது 35 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காமல் பல்கலைக்கழக நிர்வாகம் தடுத்து வருகிறது. எனவே அந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் சீல் வைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள சிறுசிறு ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றால், முதலில் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள நிலத்தை முதலில் மீட்டெடுங்கள் என பொதுமக்கள் வலியுறுத்துவதாகவும், எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், நீர் நிலை ஆக்கிரமிப்பு உள்ளதால் மாற்று இடம் பெறும் தமிழக அரசின் அரசாணை சாஸ்த்ரா பல்கலைகழகத்திற்கு பொருந்தாது என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள 30 ஏக்கருக்கும் மேலான நிலத்தில் ஒரு பகுதி நீர்நிலை என்பதால் மே மாத அரசாணை பொருந்தாது என அரசு கூறுவதால், ஆக்கிரமிப்பு நிலம் நீர்நிலைதான் என்பதை நிரூபிப்பதற்கான ஆவணங்களைத் தாக்கல் செய்ய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அரசின் நடவடிக்கையால், பல்கலைக்கழக விடுதியில் தங்கியுள்ள, மற்றும் அங்கு படித்து வரும் மாணவரின் கல்விக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதால், இந்த வழக்கு முடியும் வரை சாஸ்த்ரா பல்கலைக்கழக கட்டடங்கள் சென்னை உயர் நீதிமன்றக் கட்டுப்பாட்டில் இருக்கும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 24-ம் தேதி நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai High Court Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment