Advertisment

அண்ணாமலை மீது பியூஷ் அவதூறு வழக்கு: விசாரணைக்கு நீதிமன்றம் தடை

தமிழக பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை மீது பியூஷ் மனுஷ் தொடர்ந்து அவதூறு வழக்கின் விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Liquor at sports events in Tamil Nadu

1956-ம் ஆண்டு நடந்த சரிபார்க்கப்படாத சம்பவத்தை அண்ணாமலை மேற்கோள் காட்டி, அண்ணாமலை பேசியதாக பியூஷ் மனுஷ் அவதூறு வழக்கில் கூறியிருந்தார்.

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக தனிநபர் ஒருவர் தொடர்ந்த அவதூறு வழக்கின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் தடை விதித்தது.

நீதிபதி ஜி ஜெயச்சந்திரன், அடுத்த உத்தரவு வரும் வரை விசாரணையை நிறுத்தி வைத்து, இந்த விவகாரத்தில் பியூஷ் தனது நிலைப்பாட்டை நிறுவத் தவறியதைக் குறிப்பிட்டு, புகார்தாரரான வி பியூஷுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

நவம்பர் 29 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவில், புகாரில் எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்றாலும், விசாரணை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்து அண்ணாமலைக்கு சம்மன் அனுப்பியுள்ளது என்று குறிப்பிட்டது.

தொடர்ந்து, "மனுதாரரின் இருப்பிடத்தை வெளிப்படுத்தாத புகார் என்பதால் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்படும்" என்று உயர் நீதிமன்றம் கூறியது.

1956-ம் ஆண்டு நடந்த சரிபார்க்கப்படாத சம்பவத்தை அண்ணாமலை மேற்கோள் காட்டி, அப்போது பார்வர்டு பிளாக் தலைவர் உ. முத்துராமலிங்க தேவர் நீதிக்கட்சி தலைவர்களை இந்து மதத்தை பற்றி பேசினால், உங்களின் ரத்தம் சிந்தப்படும் என எச்சரித்ததாக கூறினார் என பியூஷ் மனுஷ் தனது மனுவில் கூறியுள்ளார்.

மேலும், தேவர் ஒருபோதும் அவ்வாறு கூறவில்லை என்றும், அண்ணாமலை இதுபோன்ற கருத்துக்களை இட்டுக்கட்டியுள்ளார் என்றும் பியூஷ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Annamalai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment