/indian-express-tamil/media/media_files/2025/01/16/HzjmD5H2qLN1yAkhDv7I.jpg)
சென்னை ஏர்போர்ட்டில் கஞ்சா பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் 3 பயணிகளிடம் இருந்து ரூ.23 கோடி மதிப்புள்ள கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தாய்லாந்தில் இருந்து நகருக்குள் ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அங்கிருந்து வந்த பயணிகளை விமான சுங்கத்துறை அதிகாரிகள் ஜனவரி 28 ஆம் தேதி சோதனை செய்தனர்.
நள்ளிரவில், சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்ற ஒரு பெண் உட்பட மூன்று இந்திய பயணிகளை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். மூன்று பயணிகளும் பதட்டமாக இருப்பதைக் கண்டறிந்த அதிகாரிகள் அவர்களை சோதனை செய்தனர்.
அவர்களின் லக்கேஜ்களை அதிகாரிகள் சோதனையிட்டபோது, ரூ .23.5 கோடி மதிப்புள்ள 23.48 கிலோ எடையுள்ள 24 பாக்கெட்டுகள் ஹைட்ரோபோனிக் கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில், பயணிகள் குழுக்களாக சென்னைக்கு அனுப்பப்பட்டதாகவும், அவர்களை தாய்லாந்துக்கு அனுப்பிய நபரை பிடிக்க தேடுதல் பணி நடைபெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.