/indian-express-tamil/media/media_files/2025/06/14/1gpIs7dBBWcoNRGV4a8f.jpg)
பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத் தலைவர் மாயவன், தங்களது சங்கத்தின் சார்பில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்த த.வெ.க தலைவர் விஜய் ஆதரவு அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு கடந்த நான்கரை ஆண்டுகளாக வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், 8 முறை தமிழக முதல்வரை சந்தித்த போதும் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் கூறிய பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத் தலைவர் மாயவன், தங்களது சங்கத்தின் சார்பில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்த த.வெ.க தலைவர் விஜய் ஆதரவு அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், த.வெ.க தலைவர் விஜய் இந்தப் போராட்டத்திற்கு முழு ஆதரவை தருவோம் என்றும், முழு அழுத்தத்தை தருவோம் என்றும் விஜய் உறுதியளித்துள்ளதாக தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் மாயவன் தெரிவித்துள்ளார்.
த.வெ.க தலைவர் விஜயை சந்தித்த பிறகு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் மாயவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக அரசு கடந்த நான்கரை ஆண்டுகளாக வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், 8 முறை தமிழக முதல்வரை சந்தித்துள்ளோம். அரசை நம்பி ஏமாற்றம் அடைந்துள்ளோம்.
எங்கள் சங்கத்தின் சார்பில், மிகப்பெரிய போராட்டத்தை நடத்த உள்ளோம்; எங்களின் முழு ஆதரவைத் தருவோம்; முழு அழுத்தத்தைத் தருவோம் என்று விஜய் தெரிவித்தார்” என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.